உலகம்

யானைக்கறி, வரிக்குதிரை கறி! வெளுத்துக் கட்டும் நமீபியா மக்கள்!

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் நிலவும் கடும் உணவு பஞ்சம் காரணமாக 150 வன விலங்குகளை கொன்று, அதன் இறைச்சியை அந்நாட்டு அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது.கடும் வறட்சி காரணமாக அங்கு விவசாயம் பாதிக்கப்பட்டு, 84 சதவீத உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் 700 வன விலங்குகளை கொன்று, அதன் இறைச்சியை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க நமீபியா திட்டமிட்டுள்ளது.30 காண்டா மிருகங்கள், 60 காட்டெருமைகள், 300 நீலக் காட்டு மான்கள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் மற்றும் 100 எலான்ட் மான்களை கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கொல்லப்பட வேண்டிய விலங்குகள் குறியீடு இடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசின் இந்த முடிவுக்கு விலங்குகள் நல அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் பீட்டா, கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. விலங்குகளின் இறைச்சி, பல்வேறு நோய்களுக்கு வித்திடும் என்றும் எச்சரித்துள்ளது.
எனினும் பீட்டாவிற்கு பதில் அளித்துள்ள நமீபியா அரசு, தற்போது கொல்லப்படும் விலங்குகள் எண்ணிக்கை, அந்நாட்டில் உள்ள மொத்த விலங்குகளில் வெறும் 1 சதவீதம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.

தற்போது, கொல்லப்படும் விலங்குகள் மூலம் தேவையற்ற பெருக்கம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 5000 விலங்குகள் இதுபோன்று கொல்லப்பட்ட நிலையில், தற்போது, வெறும் 700 விலங்குகள் மட்டுமே கொல்லப்படுவதாக நமீபியா குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button