வறுமையில் அமெரிக்க குடும்பங்கள்காலியானது டிரம்ப் அரசு கஜானா

q7tvnews@gmail.com
1 Min Read

பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இணைந்து தொடங்கிய போரினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மாபெரும் பொருளாதார இழப்புகள் குறித்துப் பென்டகன் அப்பட்டமான பொய்களைக் கூறி வருவதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அராச்சி மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்!

இந்தப் போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பொருளாதாரச் செலவுகள் குறித்து பென்டகன் உலகிற்கும் அமெரிக்க மக்களுக்கும் அப்பட்டமான பொய்களைச் சொல்லி வருவதாக அராச்சி தனது ‘X’ வலைதளப் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்த மாபெரும் சூதாட்டத்தால், அமெரிக்காவிற்கு இதுவரை நேரடியாக 100 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. பென்டகன் கூறுவதை விட இது நான்கு மடங்கு அதிகம் என அவர் மாபெரும் உண்மையை உடைத்துள்ளார்.

அமெரிக்க வரி செலுத்துவோருக்கு இதனால் ஏற்படும் மறைமுகச் செலவுகள் அவர்கள் நினைப்பதை விட மிகமிக அதிகம் என அவர் அப்பட்டமாக எச்சரித்துள்ளார். ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பத்திற்கும் மாதாமாதம் 500 டாலர் செலவாகிறது. இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 48 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் இது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் மாபெரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

“இஸ்ரேலுக்கு எப்போதும் முன்னுரிமை என்றால், அமெரிக்காவிற்கு எப்போதும் கடைநிலைதான்” எனத் தனது மாபெரும் பதிவில் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையை அராச்சி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *