UPSC தேர்வுக்கு வகுப்பெடுக்கும் சிறுவன் : 7 வயதில் கூகிள் குரு என்ற பட்டம் பெற்ற ஒரு சுட்டி குழந்தை!

UPSC தேர்வுக்கு பாடம் எடுக்கும் 7 வயது சிறுவன்…
பயிற்சி எடுத்த பலர் தேர்வில் வெற்றி…
யார் இந்த கூகுள் குரு…?
ஒரு சிறுவன் 7 வயதில் UPSC தேர்வு எழுதப்போகும் பட்டதாரி இளைஞர்களுக்கே ஆசிரியராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
நம் இந்தியாவில் TNPSC,ரயில்வே தேர்வு என ஏராளமான போட்டி தேர்வுகள் இருந்தாலும், அதன் உச்சமாக இருப்பது UPSC தேர்வுதான். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே IAS,IPS,IFS அதிகாரிகளாக மாறமுடியும். இத்தகைய தேர்வுக்கு தாயாரும் மாணவர்கள் வெறும் பாடபுத்தகத்தில் புலியாக இருந்தால் மட்டும் போதாது. அனைத்து துறை புத்தகங்களையும் படித்து, தங்கள் அறிவை விஸ்தரித்துக்கொள்ள வேண்டும். இதனால்தான் UPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பதே கடினமாக உள்ளது.
ஆனால், 7 வயது சிறுவன் இந்த கடினமாக UPSC தேர்வு எழுதப்போகும் பட்டதாரி இளைஞர்களுக்கே வகுப்பு எடுக்கிறார் என்றால், அந்த சிறுவன் எப்பேர்பட்டவராக இருப்பார் ? உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள கோர நகர் காலனியைச் சேர்ந்தவர்தான் இந்த 7 வயது சிறுவன் உபாத்யாய். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்த்தே அதீத நியாபக சக்தி இருந்துள்ளது. குழந்தையாக இருக்கும் போதே 60 நாடுகளின் கொடி மற்றும் அதன் தலைநகரங்களை கூறி அசத்தியுள்ளார்.
மேலும், தனது அதீத நினைவாற்றல் காரணமாக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அதோடு நிற்காத இந்த சிறுவன், 5 வயதிலேயே அந்த பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு பாடங்கள் எடுக்க தொடங்கியுள்ளார். பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் கூட இவரிடம் பாடம் படிக்க வந்ததாக சிறுவனின் தந்தை அரவிந்த் குமார் பெருமையாக கூறியுள்ளார்.
அதோடு நிறுத்தாத சிறுவன் உபாத்யாய் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்கத்தொடங்கியுள்ளார். இவரிடம் பயின்ற சில மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பகுதியில் சிறுவனின் புகழ் பரவியுள்ளது. அடுத்து என்ன ? UPSC தேர்வு எழுதப்போகும் பட்டதாரி இளைஞர்களும் இவரிடம் மாணவர்களாக சேர்ந்துள்ளனர். தற்போது சிறுவன் உபாத்யாய் இன்டர்நெட் மூலம் ஆன்லைன் வகுப்பு எல்லாம் எடுத்துவருகிறாராம். இதன் காரணமாக இந்த சிறுவனுக்கு கூகிள் குரு என்ற பெயரே வைத்து விட்டார்களாம்.
==================================