உலகம்

எப்போது திரும்பும் அமைதி! முட்டுக்கட்டை போடும் நெதன்யாகு!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் 90 சதவீத நிபந்தனைகள் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் எகிப்து எல்லையில் ராணுவத்தை நிறுத்தும் இஸ்ரேலின் முடிவை ஹமாஸ் நிராகரித்துள்ளது.இதற்கு முன்பு இஸ்ரேல் கொடுத்த நிபந்தனைகள் பட்டியலில் அந்த சரத்து இடம்பெறவில்லை. இஸ்ரேல் கொடுத்த நிபந்தனைகளை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டது. அதிபர் ஜோ பைடன் அதற்கு ஒப்புதல் அளித்தார்.முன்னர் சில நிபந்தனைகளை எதிர்த்து வந்த ஹமாசும், ஒரு கட்டத்தில் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. ஆனால் அமைதி ஏற்பட்டு விடும் என நம்பிக்கை எழுந்த நிலையில், திடீரென, புதிய சரத்தை நெதன்யாகு திணித்துள்ளார்.

அது தான் எகிப்து எல்லையில், இஸ்ரேல் ராணுவத்தை நிறுத்தும் அறிவிப்பு. இதனை ஹமாஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. எகிப்து அரசும் நிராகரித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.அந்த எல்லையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறினால், பணய கைதிகள் எகிப்து வழியாக, ஈரானுக்கு கடத்திச் செல்லப்படுவார்கள் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது பணய கைதிகளை சமாதானப்படுத்துவதற்கு, அல்லது அச்சுறுத்துவதற்கான போக்காக கருதப்படுகிறது.அதே நேரம் ஹமாஸ் மீண்டும் தனக்கு தேவையான விசயங்களை எகிப்து வழியாக பெற்றுக் கொள்ளும் என இஸ்ரேல் நம்புகிறது.எகிப்து எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்பட்டால், நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்படும் என ஹமாஸ் கூறி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button