A PLUS, A. B கேட்டரி, ரவுடிகள் என்பவர்கள் யார்?

ரவுடிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டு வருகின்றனர், சென்னையில் எங்கு ரவுடிகள் அதிகமாக உள்ளனர் என்பதை பார்க்கலாம்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து, ரவுடிகளுக்கு எதிரான வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ரவுடிகளை தீவிரமாக பட்டியலிட்டு, சுமார் 375 பேரை கைது செய்துள்ளனர். 153 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 2 கொலைகளுக்கு மேல் செய்தவர்கள் “A PLUS” கேட்டகிரியில் வருகின்றனர்.ஒரு கொலை செய்தவர்கள் “A” கேட்டகிரியில் வருகின்றனர்.
கொலை முயற்சி, அடிதடி வழக்கில் சிக்குபவர்கள் “B” கேட்டகிரியில் வருகின்றனர்.சில்லறை வழக்குகள், காயப்படுத்துதல் வழக்குகளில் சிக்குபவர்கள் “C” கேட்டகிரியில் வருகின்றனர்.“A PLUS” ரவுடிகள் சென்னையில் 60 பேர் உள்ளனர். இவர்களில் 33 பேர் வட சென்னையில் உள்ளனர். இவர்களில் 20 பேர் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ளனர். 12 பேர் புளியந்தோப்பிலும், பூக்கடை பகுதியில் ஒருவரும் இருந்தனர்.அவர் தான் காக்கா தோப்பு பாலாஜி. “B” கேட்டகிரியில் இருந்த பாலாஜி தனது தொடர் குற்றச் செயல்கள் மூலம் “A” மற்றும் “A PLUS” பிரிவுக்கு உயர்ந்தார்.