
ஈரானின் புதிய அமைதித் திட்டத்தை (new proposal) அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வரும் நிலையில், “அமெரிக்காவின் வல்லரசு ஆட்டம் இனி செல்லுபடியாகாது” என ஈரானின் பாதுகாப்புத்துறை மாபெரும் பிரகடனம் செய்து அதிரவைத்துள்ளது!
ஈரானியப் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய்-நிக் (Reza Talaei-Nik) முன்வைத்துள்ள 2 மாபெரும் அதிரடித் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
“மற்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் (dictate) நிலையில் அமெரிக்கா இனி இல்லை. சுயாதீன நாடுகளுக்குத் (independent nations) தனது கொள்கைகளைத் திணித்து அதிகாரம் செய்யும் மாபெரும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது” என ஈரானியப் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய்-நிக் அரசுத் தொலைக்காட்சியில் (state TV) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது “சட்டவிரோத மற்றும் பகுத்தறிவற்ற கோரிக்கைகளை” உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை வாஷிங்டன் நிர்வாகம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் அப்பட்டமாகக் கூறி அமெரிக்காவிற்கு மாபெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நாங்கள் கொடுத்த அமைதித் திட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை” என அமெரிக்காவிற்கு மாபெரும் செக்மேட் வைத்துள்ளது ஈரான். உலக அரங்கில் வல்லரசு என்ற மமதையில் அமெரிக்கா போட்ட அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் விடுத்துள்ள இந்த அறிவிப்பு அமெரிக்க அரசியலில் உச்சக்கட்டக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!


