உலகம்

உலகிலேயே இவ்வளவு பெரிய சரக்கு கப்பலை எங்கேயும் பார்த்திருக்கமாட்டீங்க..!

உலகிலேயே மிகப்பெரிய கன்டெய்னர் சரக்கு கப்பலான எம் எஸ் சி இரினா தெற்காசிய துறைமுக வரலாற்றிலேயே முதல் முறையாக கேரள மாநிலம் விழிஞ்சத்தில் அமைந்துள்ளது அதானி துறைமுகத்தில் வருகை தந்துள்ளது.

399.9 மீட்டர் நீளமும் 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், ஒரு கால் பந்து மைதானத்தை விட 4 மடங்கு பெரிய அளவிலானது. இந்த கப்பல் 4,80,000 டன் எடையுள்ள சரக்குகளை, 24346 சரக்குப் பெட்டகங்களில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பெரியதாகும்.

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் பெரிய அளவில் சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த பெரிய அளவிலான கன்டெய்னர் சரக்கு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

World's largest container ship MSC IRINA to make dock at Vizhinjam Port -  Maritime Gateway

அளவில் மட்டுமல்ல இந்த கப்பல் சமீபத்தில் நிலவக்கூடிய சுற்றுச்சூழல் மாசில் இருந்தும் சுற்றுப்புறத்தை பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல் சேமிப்பு சிறப்பு அம்சங்கள இந்த கப்பலில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கார்பன் உமிழ்வை 4 சதவீதம் வரை குறைக்க முடியும்.

MSC Irina மார்ச் 2023 இல் ஏவப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் முதல் பயணத்தைத் தொடங்கியது. இதில் 26 அடுக்கு உயரம் வரை கன்டெய்ணர்களை அடுக்கி வைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button