இப்படியொரு குரங்கை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க – வைரல் வீடியோ..!

குரங்கு கையில் பூமாலை என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்னாகும், அங்கு வேறு ஆணிவேறாக பிரித்துப் போடும். ஆனால் இங்கே ஒரு குரங்கோ சமையல் செய்வது முதல் பாத்திரம் துலக்குவது வரை சகல வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் ரேபரேலியைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி குரங்கு ஒன்றிற்கு ராணி என பெயர் சூட்டி, கடந்த 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். சத்வா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வநாத் வீட்டில் வளரும் ராணி, வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் எப்படி பெற்றோருக்கு உதவுமோ?, அதேபோல் காலையில் எழுந்ததும் ரொட்டி சுடுவது, பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறது.
அதுமட்டுமின்றி மனிதர்களைப் போலவே ராணியும் செல்போனில் வீடியோ பார்த்து செம்ம ஜாலியாக பொழுதுபோக்கிறது. குட்டியில் இருந்தே மனிதர்களுடன் வளர்வதால் சாப்பிடுவது, குளிப்பது போன்றவற்றிலும் அவர்களையே காப்பியடிக்கிறது. மனிதர்களை விட படு ஸ்மார்ட்டாக வேலை செய்யும் ராணியை விவசாயின் குடும்பத்தினர் குரங்காக அல்ல தங்களது குடும்பத்தில் ஒருத்தியாகவே பார்க்கின்றனர். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இப்படியொரு குரங்கை எங்கேயும் பார்க்க முடியாது… நமக்கு இப்படி ஒண்ணு கிடைச்சா நல்லா இருக்கும் என ஆதங்கப்படுகின்றனர்.