நேற்று எகிறி சண்டை – இன்று உருகி சமாதானம்

நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
இந்த பாட்டில எப்படி, நம்ம ரஜினிகாந்தும், பிரபுவும் தங்களுடைய சகோதர பாசத்த வெளிப்படுத்துவாங்கலோ… அதே மாதிரி வெளிப்படுத்தி இருக்காங்க… ஒரு போலிஸ் காரரும், அரசு பேருந்து நடத்துனரு…
இந்த போலிஸ் காரர் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கல்ல டிரெண்டிங்ல இருந்தாரு… இவர் டிக்கெட் எடுக்க மறுத்ததா, வீடியோ வைரலாச்சு… ஆனா தான் டிக்கெட் எடுத்ததாகவும், தன்னைப் பற்றி தவறாக வீடியோ வெளியிட்டதாகவும் அந்த காவலர் சொல்லி இருந்தாரு…
போலீசா இருந்தா என்ன டிக்கெட் எடுத்திட்டு தான பயணம் செய்யனும்னு, பொதுமக்களும் கருத்து சொல்லிட்டு வந்தாங்க…இந்த நிலைல, திடீர்னு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மேல தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவலர்கள் பல அதிரடி நடவடிக்கைகள எடுத்தாங்க…
இப்படியே போனா, போலீஸ், காவல்துறை மோதல் ஏற்படும்னு பலரும் எச்சரித்த நிலைல, இரு தரப்பை சேர்ந்தவர்களும், இப்போ சமாதானம் ஆகி இருக்காங்க…
அதுல ஹைலாட்டா, காவலரும், நடத்துனரும் ஒன்னா கொஞ்சி குலாவி, வீடியோ வெளியிட்டு, எங்க சண்ட இதோடு முடிஞ்சது பா… போய் அவங்க அவங்க வேலை பாருங்கனு சொல்லி இருக்காங்க…
இது தான் இப்போ சோஷியல் மீடியாவில டிரெண்டிங்…