உலகம்

அமெரிக்காவின் TAAD சிஸ்டத்தை முறியடித்த ஏமன் ஹவுத்தி படை!

அமெரிக்காவின் தாட் சிஸ்டத்தை தகர்த்த ஏமன் ஹவுத்திக்கள் - இஸ்ரேலில் இருந்து தெரித்து ஓடிய உலக விமான நிறுவனங்கள்

இஸ்ரேல் விமான நிலையம் மீது, ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்திய வெற்றிகரமான தாக்குதல், உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காசாவை ஆதரிக்கும் சியோனிச அமைப்பின் சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, “இஸ்ரேல்” மீது வான் முற்றுகையை அமல்படுத்தப்போவதாக
அதன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யெஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலில் உள்ள லாட் விமான நிலையம் என்று அழைக்கப்படும் பென் குரியன் விமான நிலையத்தை முதன்மை இலக்காகக் கொண்டு, விமான நிலையங்களை மீண்டும் மீண்டும் தாக்குவதன் மூலம் எங்கள் நாடு இதைச் செயல்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுாப்பிற்காக இஸ்ரேல் விமான நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன.

“லெபனான் மற்றும் சிரியா போன்ற அரபு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் அத்துமீறல்களை பெருமைமிக்க, சுதந்திரமான ஏமன் ஏற்றுக்கொள்ளாது. எங்கள் நாடு மோதலுக்கு அஞ்சாது என்றும், அடிபணிதல் மற்றும் சரணடைதலை நிராகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தின் டெர்மினல் 3 அருகே ஏமன் ஏவப்பட்ட ஏவுகணை மோதியதாகவும், இதனால் புகை மூட்டங்கள் உருவாகியதாகவும், இதனால் விமானங்கள் மற்றும் அருகிலுள்ள ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.

இந்த ஏவுகணை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளின் இடைமறிப்பு முயற்சிகளைத் தாண்டிச் சென்று தாக்கியுள்ளது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, ஆரோ 3 அல்லது THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறிக்கவில்லை. பென் குரியன் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களிடையே எச்சரிக்கை எழுந்துள்ளதாக சேனல் 12 தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தக்கூடும் என இஸ்ரேலியர்கள் இடையே கவலையை அதிகரித்துள்ளது.

சாடா மற்றும் பிற மாகாணங்களில் அமெரிக்கா டஜன் கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய போதிலும், யேமன் ஆயுதப்படைகளின் ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய அமெரிக்கா தவறிவிட்டதாக யேமன் உயர்மட்ட அதிகாரிகள் அல் மாயாதீனிடம் கூறியுள்ளனர். லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ், டெல்டா மற்றும் விஸ் ஏர் போன்ற பல முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள், சேவைகளை நிறுத்தியுள்ளன.

SWISS, ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய லுஃப்தான்சா குழுமம், ஏர் இந்தியா ஆகியவை மே 6 வரை பென் குரியன் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

ஏர் பிரான்ஸ் ஞாயிற்றுக்கிழமை டெல் அவிவ் செல்லும் விமானங்களை ரத்து செய்தது. அதேபோல TUS ஏர்வேஸ் மே 5 வரை சைப்ரஸுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை ரத்து செய்துள்ளது. வழித்தடங்களையு மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மே 7 வரை தனது சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஏமனின் இந்த தாக்குதல் இஸ்ரேல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button