உலகம்

ஒரே நேரத்தில் 3 படைகளையும் எதிர்கொள்ளும் ஏமன் ஹவுத்திக்கள்!

அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் படைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்வது எப்படி…
முதன்முறையாக மாபெரும் ஒத்திகையை நிகழ்ச்சி நடத்திய ஏமன் ஹவுத்திப் படை…

ஒரே நேரத்தில் 3 எதிரிகளையும், தரை, வான், கடல் வழியாக எதிர்கொள்வது குறித்த மாபெரும் ஒத்திகையை ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்தியுள்ளன. இதற்கு “அழிவு வெள்ள நடவடிக்கை” என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த ஒத்திகையில், ஆள் இல்லா விமானப்படை பிரிவு, பீரங்கி படை, ஸ்னைப்பர் குழுக்கள், கவச வாகன எதிர்ப்பு படை, காலாட் படை, கவச வாகனப் படை மற்றும் போர்கள பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் ஒருங்கிணைந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகையின் நோக்கம், அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் படைகள் ஏமன் மீது போர் தொடுத்தால், அவர்களது தாக்குதல் இலக்குகள் என்னவாக இருக்கும், அதனை எதிர்கொள்வது எப்படி என்ற பயிற்சி ஏமன் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 275வது நாளை அடைந்துள்ளது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 123 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 38,153 ஆக உயர்ந்துள்ளது. 87,828 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காசா மீதான தாக்குதலை உலகமே வேடிக்கைப் பார்க்கும் நிலையில், ஏமன் ஹவுத்திப்படைகள் இஸ்ரேல் மீது தன்னிச்சையான போர் அறிவிப்பை வெளியிட்டனர். செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு எந்த கப்பல் சென்றாலும் தாக்கப்படும் என அறிவித்தனர்.

செங்கடல் கப்பல் போக்குவரத்தை தனது கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்திருந்த நிலையில், அந்த வழக்கத்தை ஏமன் ஹவுத்திப்படைகள் உடைத்தனர். இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஏமன் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. ஹவுத்திப்படைகளும் கடும் பதிலடியை கொடுத்து வருவதோடு, செங்கடலை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button