உலகம்

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் – ஏமன் அறிமுகம் செய்துள்ள புதிய ஆள் இல்லா, அதிவேக தாக்குதல் படகு!

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம்….
1500 கிலோ வெடி மருந்துகளை சுமந்து சென்று தாக்கும் ஆள் இல்லா படகு…
ஏமன் அறிமுகம் செய்துள்ள அதிநவீன புதிய ஆயுதம்…

ஏமன் ஹவுத்திப் படைகள் அறிமுகம் செய்துள்ள புதிய ஆயுதம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டணி படைகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் இஸ்ரேலின் டூடர் என்ற கப்பலை ஏமன் ஹவுத்திப் படைகள் தாக்கின. இதுகுறித்து வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலானது.

இந்த தாக்குதலுக்கு முதன்முறையாக ஹவுத்திக்கள் புதிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அந்த ஆயுதம் தான் ஆள் இல்லா படகு. இதுவரை ஆள் இல்லா விமானத்தைத் தான் உலக நாடுகள் ராணுவத்துக்காக பயன்படுத்தி வருகின்றன. முதன் முறையாக (USV) எனப்படும் unmanned surface vehicle என்ற ஆள் இல்லா அதிவிரைவு போர் படகு ஆகும்.

இந்த போர்படகு ஒரு நபர் மட்டுமே அமரும் வகையில் சிறிதாக வடிவமைக்கப்பட்டது. அதேநேரம் அதில் ஆட்கள் இல்லாமலேயே கட்டுப்பாட்டு அறையில் இருந்து, எதிரிகளின் இலக்குகளை நோக்கி செலுத்த முடியும்.
மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகம் வரை கடலில் விரைந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை.

சுமார் 1000 முதல் 1500 கிலோ எடை கொண்ட வெடிமருந்துகளை சுமந்து கொண்டு தாக்கும் சக்தி கொண்டவை. இதனால் மிகப்பெரிய கப்பலை கூட, இந்த படகுகள் மூழ்கடிக்கும். அதே போல் கப்பலின் எஞ்சின் பகுதியை சரியாக குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை. அண்மையில் இஸ்ரேலின் டூடர் என்ற கப்பலின் எஞ்சின் பகுதியை குறிவைத்து தான் தாக்குதல் நடைபெற்றது.

இதனால் கடும் சேதம் அடைந்த அந்த கப்பல் பின்னர் நெருப்பு அணைக்கப்பட்டு, எரித்திரியா நாட்டு கடற்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஆயுதம் மிகப்பெரும் வெற்றியை தங்களுக்கு கொடுத்துள்ளதாக ஹவுத்திக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button