உலகம்

உலகிலேயே முதல் முறை… மரத்திலான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது!

உலகிலேயே முதன் முறையாக மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் விண்ணில் ஏவியுள்ளனர். இந்த மர சாட்டிலைட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த வுட்டன் சாட்டிலைட்டிற்கு லிக்னோசாட் என பெயரிடப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் லிக்னோ என்றால் மரன் என்று பொருள்.

இந்த சிறிய செயற்கைக்கோளின் எடை 900 கிராம் மட்டுமே. லிக்னோசாட் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கார்கோ கேப்சூலில் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு மரத்தை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதாவது பூமியை விட விண்வெளியில் எவ்வளவு நாட்கள் மரத்தால் வீடு கட்டினால் நீடிக்கும் என்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்டுள்ளது. லிக்னோசாட் பேனல்கள் மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹொனோகி என்ற மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button