கெளதம் அம்பானியின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண் யார் தெரியுமா?
பல் மருத்துவர் டு அதானி அறக்கட்டளை நிறுவனர் - யார் இந்த பெண்மணி?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோல் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானியின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி ப்ரீத்தி அதானி பக்க பலமாக உள்ளார்.
பல் மருத்துவரான ப்ரீத்தி அதானி, 1996ம் ஆண்டு முதல் அதானி அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அறக்கட்டளையானது கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த அறக்கட்டளை இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் 7.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 6,75,000 கோடி ரூபாய் என்றால், மனைவி ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பும் நம்மை தலைசுற்ற வைக்கிறது. முற்றிலும் அறக்கட்டளை, சமூகசேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு, 8,327 கோடி ரூபாயாகும்.
ப்ரீத்தி அதானியின் கல்வி மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புக்கான பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆண்டு, குஜராத் லா சொசைட்டி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.