ஒரே படுக்கையில் 4 சிங்கங்களுடன் உறங்கும் சிங்கப்பெண் – வைரல் வீடியோ!

பெண் ஒருவர் தான் மீட்டெடுத்த 4 சிங்கக்குட்டிகளுடன் ஒரே படுக்கையில் கட்டியணைத்து படுத்துறங்கும் வீடியோ இணையத்தில் பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ் கமெண்ட்களை குவித்து வருகிறது
திசைமாறியோ அல்லது பெற்றோரை இழந்தோ காடுகளில் இருந்து ஊருக்கு வரும் விலங்குகளுக்கு மனிதர்கள் தஞ்சம் கொடுப்பது உண்டு. ஆனால் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை சிறிது நேரத்திற்கு அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. காரணம், அப்பெண்மணி தான் மீட்டு வந்த 4 சிங்கங்குட்டிகளுடன் படுக்கையில் ஒன்றாக படுத்து ஜாலியாக போஸ் கொடுத்துக்கொண்டிருக்கார்.
விலங்குகளை மீட்பவரான ஃப்ரேயா ஆஸ்பினால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் 4 சிங்கக்குட்டிகளுடன் படுக்கையில் படுத்திருக்கிறார். அவை அனைத்தும் ஃப்ரேயாவின் முகத்துடன், முகம் வைத்து படுத்திருக்கின்றன. மரணத்தின் பிடியில் இருந்த சிங்கங்களை ஃப்ரேயா தான் காப்பாற்றியுள்ளார். காட்டு விலங்குகளைப் பிடித்து விற்பனை செய்யும் கும்பலிடம் இருந்து தைரியமாக போராடி அந்த சிங்கக் குட்டிகளை மீட்ட அவர், தற்போது அதன் தாயாக மாறியுள்ளார்.
ஆம், அந்த சிங்கங்களுடன் உறங்குவது, விளையாடுவது என குட்டி சிங்கங்களின் தாயாகவே மாறிவிட்டதாக உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சிங்கக்குட்டிகளை பெற்ற தாய் போல் ஃப்ரேயா பேணிக்காப்பதை சிலர் பாராட்டினாலும், காட்டு விலங்குடன் இப்படி நெருக்கமாக படுத்து உறங்குவது மிகப்பெரிய ஆபத்தில் முடியக்கூடும் என எச்சரித்துள்ளனர்.