துபாயில் ஏன் வந்தது இவ்வளவு வெள்ளம்? எல்நினோ என்றால் என்ன?

மழை என்றால் என்ன என்று கேட்கும் துபாயில் பெய்த பெருமழை காரணமாக துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் மிதந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. அது எப்படி நடந்தது? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த காணொளியில் காணலாம்.
எல் நினோ என்ற பெயரை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விபட்டிருப்போம். உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் வெப்ப நிலை அதிகரிக்கும் நிகழ்வே எல் நினோ என்று கூறப்படுகிறது.
பாலைவன பகுதியான துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மழை பெய்வதே அபூர்வமான நிகழ்வாகும். சராசரியாக ஆண்டுக்கு 94.7 மில்லிமீட்டர் மழை பெய்யும் அளவு துபாய் வறட்சியான பகுதி என்று கூறப்படுகிறது. ஆனால், அங்கு கடந்த 16-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 142 மில்லிமீட்டர் மழை கொட்டியுள்ளது. இதனால் மழையே காணாத துபாய் நகரம் வெள்ளத்தில் தத்தளித்ததுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளன.
இந்த திடீர் பெருமழைக்கு அரேபிய தீபகற்பத்தை கடந்து ஓமன் வளைகுடாவை கடக்கும் காற்றழுத்த நிலைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக அரேபிய கடலில் உருவாகும் .காற்றழுத்த தாழ்வு நிலைகள் கிழக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறி இந்தியாவின் மேற்கு பகுதிகளையே தாக்கும்.
ஆனால், புயலாக உருப்பெறாத இந்த காற்றழுத்த நிலை மழையாக மாறி துபாய் உள்ளிட்ட அமீரக நாடுகளையும், பஹ்ரைன், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளையும் தாக்கியுள்ளது. எல் நினோ விளைவால் மாற்றில் ஏற்படும் மாறுபாடே காற்றழுத்த நிலை இப்படி மாற காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
============