உலகம்

ஏன் தங்க விற்பனையில் துபாய் கொடி கட்டிப் பறக்கிறது?

துபாயில் தங்கம் விலை குறைவாக உள்ள நிலையில், இங்கு வாங்கி வருவதன் மூலம் சட்டரீதியாகவே எவ்வளவு சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம்.மார்ச் 7 நிலவரப்படி துபாயில் 10 கிராம் தங்கம் 77,281 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே தேதியில் மும்பையில், 87,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது துபாயை விட சுமார் 11.58 சதவீதம் அதிகம்.எனினும் சட்டரீதியாக தங்கத்தை அதிக அளவில் வாங்கும் போது, இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளால் பெரிய லாபம் கிடைக்காது. அதே நேரம் இந்திய அரசு அனுமதித்துள்ள விதிகளின் படி, குறைந்த அளவு தங்கத்தை வாங்கி வந்து லாபம் பெறலாம்.அதாவது துபாயில் குறைந்த பட்சம் ஒரு வருடம் வசிப்பவர்கள் ஆணாக இருந்தால், சுமார் 50,000 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை வாங்கி வரலாம்.

இதற்கு இந்தியாவில் வரிகள் வசூலிக்கப்படாது. அதே நேரம் பெண்களாக இருந்தால், 1 லட்சம் ரூபாய் வரை அவர்கள் தங்கத்தை வாங்கி வரலாம். இதன் மூலம் குறைந்த பட்சம் பெண்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலும், ஆண்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் சேமிக்கலாம்.இந்தியாவில் தங்கத்திற்கு 6 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 10 கிராம் தங்கத்திற்கு 4842 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. 10 கிராம் தங்கத்தை துபாயில் வாங்கி, இங்கு வரிகள் செலுத்தி விற்பனை செய்யும் போது, சுமார் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். அதே நேரம் டிக்கெட் கட்டணத்தை கணக்கிட்டால், இதில் பெரிய லாபம் இருக்காது.துபாயில் தங்கம் மலிவாக கிடைக்க முக்கிய காரணம், அங்கு தங்கத்தின் மீது வரிகள் கிடையாது. ஆனால் இந்தியாவில் 6 சதவீத சுங்க வரி தவிர்த்து, 3 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்ட மேலும் சில வரிகள் விதிக்கப்படுகின்றன.மேலும் துபாயில், தங்க சுத்திகரிப்பு ஆலைகள் பெரிய அளவில் செயல்படுகின்றன. அந்த வசதிகள் இந்தியாவில் குறைவு. எனவே தான் துபாய் தங்க விற்பனையில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button