உலகம்

ஹமாஸை விட ஹிஸ்புல்லாவை கண்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் அஞ்சுவது ஏன்?

இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஹமாஸை விட ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. ஹிஸ்புல்லா ஒரு திறமையான அமைப்பு என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். இதற்கு இஸ்ரேலும், அமெரிக்க வெள்ளை மாளிகையும் கண்டனம் தெரிவித்தன.ஹிஸ்புல்லாவை அச்சுறுத்துவதற்காகவே அமெரிக்காவும், பிரிட்டனும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த அமைப்பை கண்டு வல்லரசு நாடுகள் ஏன் அஞ்சுகின்றன என்பதை பார்க்கலாம்.ஒப்பீட்டளவில் ஹமாஸை விட 3 மடங்கு வீரர்கள், ஆயுதங்களை கொண்ட அமைப்பு ஹிஸ்புல்லா. லெபனானில் ஹிஸ்புல்லா ஆதரவு பெற்ற எம்.பிக்கள் 62 பேர் உள்ளனர். லெபனான் அரசு மற்றும் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஹிஸ்புல்லா.

மேலும் இஸ்ரேலை பொருத்தவரை ஹமாசின் ராக்கெட் தாக்குதலை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இதற்கு காரணம் இஸ்ரேலின் ஐயன் டோம் சிஸ்டம். இந்த சிஸ்டம் செயல்படாமல் போனால் மட்டுமே, இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் ஹமாஸ் அமைப்பு வைத்திருக்கும் பெரும்பாலான ராக்கெட்டுகள் குறைவான தூரம் சென்று தாக்கக் கூடியவை. இந்த வகை ராக்கெட்டுகளை இஸ்ரேல் எளிதாக தடுத்து விடுகிறது.ஆனால் ஹிஸ்புல்லா வைத்திருக்கும் ராக்கெட்டுகள் அப்படியல்ல. நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய ராக்கெட்டுகள். இது இஸ்ரேலின் ஐயன் டோம் சிஸ்டத்தால் கட்டுப்படுத்த முடியாத ராக்கெட்டுகள் என பிரான்ஸ் 24 சேனல் தெரிவிக்கிறது.இஸ்ரேலின் ஐயன் டோம் சிஸ்டம் என்பது, 10 பேட்டரிகள் கொண்டது என்றும், 150 சதுர கிலோ மீட்டர் பரப்பை மட்டுமே பாதுகாக்கக் கூடியது என்றும் பிரான்ஸ் 24 சேனல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாக்கப்பட வேண்டிய மொத்த வான் பரப்பு 22000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.இதுபோன்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் 1 லட்சம் ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வைத்துள்ளது. குறைவான தூரம் சென்று தாக்கும் சுமார் 50 ஆயிரம் ராக்கெட்டுகளை வைத்துள்ளது.

இது எல்லாவற்றையும் விட ஹிஸ்புல்லாவின் மிக முக்கியமான ஆயுதம், விமான எதிர்ப்பு பீரங்கிகள். தற்போது காசா மீது குண்டு மழை பொழிவது போன்று, ஹிஸ்புல்லா மீது இஸ்ரேலால் தாக்குதல் நடத்த முடியாது.காரணம் ஹிஸ்புல்லா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட SA8 ரக விமான எதிர்ப்பு பீரங்கிகளை வைத்துள்ளது. சுமார் 7.8 மைல் தூரம் வானில் சென்று தாக்கும் வல்லமை படைத்தவை. கடந்த 5 ஆண்டுகளில் இந்த பீரங்களின் எண்ணிக்கை ஹிஸ்புல்லா இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். குறைவான உயரத்தில் பறந்தால் மட்டுமே இலக்குகள் மீது சரியாக குண்டு வீச முடியும். ஆனால் அப்படி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆயுதங்களை ஹிஸ்புல்லா வைத்துள்ளது. சிரியா ராணுவத்தை விட, அதிக ஆயுதங்களை ஹிஸ்புல்லா வைத்துள்ளது. அதிக உயரத்தில் பறந்து குண்டு வீசும் போது, இலக்குகளை சரியாக கணிக்க முடியாது என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2006 ஆம் ஆண்டு போரில் இஸ்ரேலின் 50 Merkava டாங்குகளை ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன. ஹிஸ்புல்லா செலுத்திய ஏவுகணைகளில் 20 சதவீதம் இலக்கை அடைந்தன.
இந்த காரணங்களுக்காகவே ஹிஸ்புல்லாவை கண்டு, இஸ்ரேல் அஞ்சுவதாக பாதுகாப்புத்துறை ஆய்வளார்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button