துணிச்சலான உக்ரைன் பெண் பத்திரிக்கையாளர் விக்டோரியா ரோஷியானா – ரஷ்ய படைகள் செய்த கொடுமைகள்! ருக்கு நேர்ந்த கதி!
மூளை அகற்றம் - எழும்புகள் உடைப்பு!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 3 வருடங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. இப்போரினால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உக்ரைன் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கொடூர மரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைனை சேர்ந்த விக்டோரியா ரொஷினா எனும் பெண் பத்திரிகையாளர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காணாமல் போனார்.
சில நாட்களுக்கு முன் போரினால் உயிரிழந்த உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்றும் காணப்பட்டது. பின்னர் அது விக்டோரியா ரொஷினா உடல் என உறுதி செய்யப்பட்டது.
தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் விக்டோரியா பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவரின் மூளை , கண்கள் உள்ளிட்ட பாகங்கள் அகற்றப்பட்டுள்ளன. விலா எலும்பு மற்றும் உடலின் பல எலும்புகளும் உடைக்கப்பட்டுள்ளன. பல முறை எலக்ட்ரிக் ஷாக்கினால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் ஷாக் வைத்ததற்கான தழும்புகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தனி சிறையில் அடைக்கப்பட்ட அவர் போதைப்பொருள் மற்றும் பட்டினியால் துன்புறுத்தப்பட்டதாக சக சிறைக்கைதி தெரிவித்துள்ளார். அவரது எடை 30 கிலோவுக்கும் கீழாக குறைந்ததாக அக்கைதி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தைரியமிக்க பத்திரிகையாளராக விக்டோரியா அறியப்படுகிறார்.
ரஷ்யாவின் போர்க்குற்றங்களை வெளிக்காட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டபோது ரஷ்ய படையினரிடம் சிக்கியதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.