உலகம்

வீல் சேர், ஒரு பக்க கண் பார்வை இழப்பு – உலக வல்லரசுகளை மிரள வைத்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒரு மாற்றுத் திறனாளி! அதிர வைக்கும் தகவல்கள்!

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் வரும் வாத்தியார் விஜய் சேதுபதியின் கதையையும் விஞ்சியது, ஹமாஸ் இயக்க தலைவர் முகமது டெயிஃப்பின் கதை.இஸ்ரேலின் தாக்குதலால் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, இளம் வயதில் மனைவி, குழந்தைகளை இழந்து, உடல் ஆரோக்கியத்தையும் இழந்த ஒரு அகதி தான் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய ராணுவ பிரிவு தலைவர் முகமது டெயிஃப்.

இஸ்ரேலின் அதிநவீன உளவுத்துறையான மோசாத் இவரை கொல்ல 7 முறை முயற்சி தோல்வியை தழுவியது. இதனால் இவரை இஸ்ரேல் 7 பிறவிகள் கண்ட பூனை என கிண்டலாக அழைத்து வந்தது.ஒரு முறை நடந்த தாக்குதலில் ஒரு பக்க கண் பார்வையையும், கால் மூட்டில் எழும்பு முறிவையும் சந்தித்தார் டெஃய்ப். சுமார் 20 ஆண்டுகளாக வீல் சேரில் அமர்ந்து, ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவை இயக்கி வந்துள்ளார். இவர் பற்றிய மேலும் சில முக்கியத் தகவல்களை பார்க்கலாம்.

காசாவில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த இவரது இயற்பெயர் முகமது தயிப் இப்ராஹிம் அல் மஸ்ரி. காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரது முன்னோர்கள் 1950களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் உயிர் துறந்தவர்கள். ஹமாஸ் அமைப்பில் இணைந்த இவர், அதன் அதிமுக்கிய தலைவராக இருந்த எஞ்சினியர் எனப்படும் யஹ்யா அயாஷின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளார்.யஹ்யா அயாஷ் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதில் வல்லவர். அவரை இஸ்ரேல் குறிவைத்து கொன்றது.

இருப்பினும் தாக்குதல் தொடர்ந்தது. இதன் பின்னணியை இஸ்ரேல் விசாரித்தபோது, முகமது தயிப் என்ற நபரை பற்றி அறிந்து கொண்டது.அப்போதில் இருந்தே இஸ்ரேல் உளவுத்துறையான மொசாத்தின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தார். இவரது தலைக்கு தொடர்ந்து குறிவைத்து வந்தது இஸ்ரேல் இதனால் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

இவரை டெய்ஃப் என ஹமாஸ் அமைப்பினர் அழைக்கத் தொடங்கினர். டெய்ப் என்றால் விருந்தாளி என அர்த்தம். காரணம் இவர் எப்போது, வருவார் எப்போது செல்வார் என்பது யாருக்கும் தெரியாது.இஸ்ரேலின் வான் வழித் தாக்குதலில் இருந்த தப்ப பாலஸ்தீனியர்கள் ஆழமான சுரங்கங்களை தோன்டுவது வழக்கம்.வாழ்நாளில் பெரும்பகுதியை அந்த சுரங்கத்திலேயே கழித்தார் டெய்ப். இதனால் இவரை கொல்வது இஸ்ரேலுக்கு பெரிய சவாலாக இருந்தது.ஒருமுறை இவர் இருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசியது.

அதில் அவரது மனைவி மற்றும் ஆண் குழந்தைஅலி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவரும் பலியாகி இருப்பார் என இஸ்ரேல் நம்பியது. ஆனால் அவர் அப்போது வீட்டில் இல்லை. அவர் பத்திரமாக உள்ளதாக ஹமாஸ் அறிவித்தது.அடுத்தடுத்து சுமார் 7 முறை இவரை கொல்ல இஸ்ரேல் முயற்சி செய்தது. 7 முறையும் தப்பினார். ஒரு முறை தாக்குதலில் இவரது ஒரு பக்க கண் பார்வை போனது, காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சக்கர நாற்காலியில் தனது பணிகளை தொடங்கினார். சுமார் 20 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் இருந்தவாறு ஹமாஸ் இயக்கத்தை இயக்கி வருகிறார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய ஆயுதமான ஏவுகணைகளை உருவாக்கியதில் இருவரது பங்கு பேசப்படுகிறது.

ஹமாஸ் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் தேடித் தேடி கொலை செய்து வந்ததால், மூத்த தலைவர்களின் இருப்பிடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டன. அதனால் கடந்த 7 ஆண்டுகளாக டெயிஃப் பற்றி தகவல்கள் அதிகம் வெளிவரவில்லை.தற்போதைய தாக்குதலுக்கு மூளையாக இவர் இருந்ததால், மீண்டும் இஸ்ரேலின் ஹிட் லிஸ்டில் முதல் பெயராக இவரது பெயர் உள்ளது.இவரது சிறு வயது புகைப்படம் மட்டுமே தற்போது உள்ளது. 54 வயதாகும் இவர் தற்போது எப்படி இருப்பார் என்பது வெளி உலகிற்கு தெரியாது.இதுபற்றி பிபிசியிடன் கூறியுள்ள இஸ்ரேலிய மூத்த உளவு அதிகாரி ஒருவர், மொபைல் போன், கம்யூட்டர் பயன்படுத்தாத ஒருவர் பற்றி எந்த நாட்டின் உளவுத்துறையும், எந்த தகவலையும் சேகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button