என்ன நடக்கிறது பங்குச் சந்தையில்?

டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு கொண்டு வரும் புதிய பொருளாதார கொள்கைகள் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. 3வது வாராக திங்கட்கிழமை முக்கிய நிறுவனங்கள் 2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 800 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகளும் சரிவைச் சந்தித்துள்ளன. Zomato, IndusInd Bank, M&M, Adani Ports, Infosys, மற்றும் Tata Steel ஆகிய நிறுவனங்கள் தலா 2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்ற டொனால்டு டிரம்பின் அறிவிப்பு பங்குச் சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
சில முக்கிய நிறுவனங்களில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற்றது போன்ற பல காரணிகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இந்திய நிறுவனங்கள் மோசமான செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள நட்டம் உள்ளிட்ட மேலும் சில காரணிகள் பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக உள்ளன.
இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த சரிவின் மூலம் ஒரே நாளில் பல இந்திய நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை இழந்துள்ளன.