ஐபிஎல் போட்டியில் வென்ற ஆர்சிபிக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன?

18 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் சாம்பியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி ஐபிஎல் 2025 பட்டத்தை வென்றது. மூன்று முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணி, நான்காவது முயற்சியிலேயே கோப்பையை வென்றது.
ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன்களாக உருவெடுத்ததால் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர். ஐபிஎல் 2025 சாம்பியனாக உருவெடுத்த ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 ரன்னர்-அப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தகுதிச் சுற்று அணிக்கு ரூ. 7 கோடி பரிசுத் தொகையும், எலிமினேட்டர் அணிக்கு ரூ. 6.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இத்துடன் ஆரஞ்சு தொப்பி, பர்பிள் தொப்பி, ஃபேர் ப்ளே விருது, பேண்டஸி கிங் ஆஃப் தி சீசன், எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன், பெஸ்ட் கேட்ச், அதிக சிக்ஸர்கள் என வீரர்களுக்கு விருதுகளும், பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருதுடன் ஒரு லட்சம் பரிசுத்தொகை ஜிதேஷ் சர்மாவிற்கும், ஃபேண்டஸி கிங் ஆஃப் தி மேட்ச் விருதுடன் ஒரு லட்சம் பரிசுத்தொகை ஷஷாங்க் சிங்கிற்கு வழங்கப்பட்டது. பைனல் மேட்சில் சிக்ஸரை பறக்கவிட்ட ஷஷாங்க் சிங்கிற்கு சூப்பர் சிக்ஸ் விருதும் ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
பைனல் மேட்ச் கிரீன் டாட் பால்ஸ் அவார்டுடன் க்ருணால் பாண்ட்யாவுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சீசனின் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதுடன் 10 லட்சம் பரிசுத்தொகையை சாய் சுதர்ஷனும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற விருதுடன் டாடா கர்வ் காரை வைபவ் சூர்யவன்ஷியும் பெற்றனர்.
ஃபேண்டஸி கிங் ஆஃப் தி சீசனாக தேர்வு செய்யப்பட்ட சாய் சுதர்ஷனுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், சீசன் சூப்பர் சிக்ஸாக தேர்வு செய்யப்பட்ட நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. முகமது சிராஜ் சீசன் கிரீன் டாட் பால்ஸ் விருதுடன் 10 லட்சத்திற்கான பரிசுத்தொகை பெற்றார்.
இந்த சீசனின் பர்பிள் கேப்பை வென்ற பரிதி கிருஷ்ணாவுக்கு 10 லட்சமும், ஆரஞ்சு கேப்பை வென்ற சாய் சுதர்சனுக்கு 10 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. சீசனுடைய மிகவும் மதிப்பு மிக்க வீரராக தேர்வு செய்யப்பட்ட சூர்ய குமார் யாதவிற்கு 15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.