உலகம்

ஓரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறோம் – சம்பளம் இல்லை! IT ஊழியர்கள் போர்க்கொடி!

பெங்களூருவில் இன்போஷிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களின் பணியாளர்கள் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நிகழ்ச்சியில் பேசிய இன்போஷிஸ் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.70 மணி நேரம் வேலை என்றால், 6 வேலை நாட்களில், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் ஆகும். தற்போது, அவரது கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அதிகபட்ச பணிக் காலத்தை 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாக உயர்த்துவது குறித்து, கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.


இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுடன், அரசு கைகோர்த்து, தங்களது வாழ்க்கையை சிதைப்பதாக கூறி, ஐ.டி. ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.தற்போது, 12 மணி நேரம் வேலை செய்தாலும், கூடுதல் நேரத்திற்கு ஐ.டி. நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.சுமார் 70 சதவீத ஐ.டி. ஊழியர்கள் பல்வேறு மன நோய்களுக்கு ஆளாகி இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டிள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர் சட்டங்கள் பொருந்த வேண்டும் என்றும், அது வரையறுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக பெண்கள் பணியாற்ற தகுதியற்ற துறையாக ஐ.டி. துறை மாறி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button