இஸ்ரேல் மீது படையெடுக்க தயங்க மாட்டோம் – துருக்கி பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம்…
துருக்கி அதிபர் தையிப் எர்டோகான் பகிரங்க எச்சரிக்கை…
பாலஸ்தீனியர்கள் மீதான அநீதி தொடர்ந்தால், இஸ்ரேல் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என துருக்கி அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ராணுவ வலிமையில் 8ஆம் இடத்தில் உள்ள நாடு துருக்கி. முஸ்லீம் நாடுகளில் பாகிஸ்தானை விட, ராணுவ வலிமை மிக்க நாடு. ஈரான் கூட 14வது இடத்தில் தான் உள்ளது. நேட்டோ அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது துருக்கி. இஸ்ரேல் ராணுவ வலிமையில் 17வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், காசா போராளிக்குழுக்கள், ஹிஸ்புல்லா போராளிக்குழு போன்ற அமைப்புகள் உடன் தான் இஸ்ரேல் மோதி வருகிறது. ஒரு சுதந்திர நாட்டுடன் தனித்து போரில் ஈடுபட்டதுகிடையாது. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் முழு உதவியின் பேரிலேயே தற்போது வரை போர்களை எதிர்கொண்டு வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில் இதுப்பற்றி பேசிய துருக்கி அதிபர் எர்டோகான், துருக்கி ராணுவம் லிபியா, அஜர்பைஜான் நாடுகளுக்கு நுழைந்தது போன்று, இஸ்ரேலுக்குள் நுழைவது பெரிய விசயம் அல்ல. என்றும் அதற்கான தயாரிப்பில் துருக்கி ராணுவம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்குள் நுழைய துருக்கி ராணுவம் தயங்காது எனக் கூறியுள்ளார். இது இஸ்ரேலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர், யாயிர் லாபித், எர்டோகான் மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் 297வது நாளாக கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 39,324 பேர் கொல்லலப்பட்டுள்ளனர். 90,830 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உலக நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக அறிக்கை போர்களை மட்டுமே தொடுத்து வருகின்றன.
====