வடக்கு பகுதியின் கட்டுப்பாட்டை இழந்து விட்டோம் – இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவர்!

வடக்கில் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவர் புகார்…திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களில் 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், டிரோன்களை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல், லெபனான் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது குண்டு வீசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது தாக்குதலை ஹிஸ்புல்லா அதிகப்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிழமை மட்டும் 135 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளது. புதன்கிழமை மட்டும் 70க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.இதனால் வடக்கு கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள சனோபர் ராணுவத் தளம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளம் முழுக்க முழுக்க ஐயன் டோமால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் சில ராக்கெட்டுகள் இலக்கை தாக்கியுள்ளன.இதே போல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் Katzrin என்ற பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளை ஆக்கிரமிப்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கோலன் குன்றுகள் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள ஆக்கிரமிப்பு அதிகாரி ஒருவர், நெதன்யாகு தங்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.இதே போல் வடக்கு இஸ்ரேலின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து விட்டோம் என அந்நாட்டு எதிர் கட்சித் தலைவர் யாயிர் லாபித் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே பாலஸ்தீன பத்தா அமைப்பின் முக்கியத் தலைவர் கலீல் மக்தா என்பவரை, லெபனானில் இஸ்ரேல் குண்டு வீசிக் கொன்றுள்ளது. பாலஸ்தீன் அதிபர் மக்மூத் அப்பாசின் பத்தா இயக்கம் ஆயுத போராட்டத்தை கைவிட்ட அமைப்பாகும். அந்த அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் புதிய எதிரியை இஸ்ரேல் சம்பாதித்துள்ளது.