266வது நாளாக நீடிக்கும் போர் – அல் சுஜேயா படையெடுப்பை முறிடியத்த ஹமாஸ்!

266 வது நாளாக இஸ்ரேலை எதிர்கொள்ளும் பாலஸ்தீன் போராளிகள்…
அல் சுஜேயா படையெடுப்பை முறியடித்த ஹமாஸ்…
இஸ்ரேல் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிப்பு…
266வது நாளாக நிராயுதபாணிகளான பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அல் சுஜேயா பகுதியில் வியாழக்கிழமை திடீர் படையெடுப்பை மேற்கொண்ட, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை, ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன போராளிக்குழுக்கள் முழு வீச்சில் விரட்டியடித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் போராளிகள் 5 இடங்களில் இஸ்ரேலை குறிவைத்து, மிகப்பெரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் இஸ்ரேல் தரப்பில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் இஸ்ரேலின் பல கவச வாகனங்கள் உள்ளிட்ட கருவிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன் குழுக்கள் கூறியுள்ளன.
ஒரு இடத்தில் தங்களது ஸ்னைப்பர் குறிவைத்து சுட்டதில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.எனினும் வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் தங்கள் தரப்பில் ஒரே ஒரு வீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
தங்கள் தரப்பில் Eyal Shynes, 19 என்ற 19 வயது வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
காசா தரைவழித் தாக்குதலில் தங்கள் தரப்பில் இதுவரை 316 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
===