தமிழ்நாடு
படிப்பில் இருந்து… படிப்படியாக அரசியலுக்குள் நுழையும் விஜய்! நீட்டை எதிர்த்து போர்க்கொடி!

மாணவர்கள் உடனான இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், நேரடியாக அரசியல் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வு குறித்து அவர் பேசியதாவது, நீட் தேர்வு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது மட்டுமே தீர்வு. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு விஜய் பேசியுள்ளார்.