உலகம்

சோயூனியன் சரக்கு கப்பலை ஏமன் படைகள் கைப்பற்றும் காட்சி வெளியீடு!

இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றி தகர்த்த ஏமன் படை…
திரைப்படத்தை விஞ்சும் பரபரப்பு காட்சிகள் வெளியீடு…

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை, அந்நாட்டிற்கு செங்கடல் வழியாக எந்த நாட்டு கப்பலும் செல்லக் கூடாது எனக் கூறி, மீறிச் செல்லும் கப்பல்களை ஏமன் ஹவுத்தி அரசுப் படைகள் தாக்கி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் துறைமுகத்திற்கு சென்றதாக கூறி, கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சோ யூனியன் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுத்திப்படை அதிரடித் தாக்குதல்களை நடத்தின. கடல் ஏவுகணைகள், படகுகளில் சென்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் செயல்பாட்டை இழந்த சோ யூனியன் கப்பல், உடனடியாக உதவி கேட்டது. இதனையடுத்து, பிரிட்டன், அமெரிக்க போர்க்கப்பல்களின் உதவியுடன், சோ யூனியன் கப்பலில் இருந்த, ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஏமன் படை, திடீரென அந்த கப்பலை கைப்பற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.

போர் படகுகளில் சென்று, அந்த கப்பலை கைப்பற்றினர். பிறகு கப்பலை முழுமையாக அழிக்கும் வகையில், வெடிமருந்துகளை போட்டு, ஒரே நேரத்தில் அவற்றை வெடிக்கச் செய்தனர். இந்தக் காட்சிகளை நேரடியாக படம் பிடித்துத்துள்ளனர். கப்பல் வெடிக்கும் போது, “இஸ்ரேல் அழியட்டும்”
“இறைவன் மிகப் பெரியவன்” என முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது சோ யுனியன் கப்பல் தொடர்ந்து 4 நாட்களாக நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், அந்த கப்பலை அங்கிருந்து இழுத்துச் செல்ல, அனுமதிக்கப்படுவதாக ஏமன் படையின் செய்தித் தொடர்பாளர் Mohammad Abdul Salam அறிவித்தார்.

அந்தக் கப்பலில் பிற சரக்குகள் மட்டுமின்றி, பல கோடி ரூபாய் மதிப்பிலான 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் இருந்துள்ளது. அந்த எண்ணெய் கடலில் கலந்தால், சுற்றுச்சூலுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இந்த அனுமதியை வழங்குவதாக ஏமன் படைகள் தெரிவித்துள்ளன.

மேலும் செங்கடல் கட்டுப்பாடு ஏமன் படைகளிடம் வந்துள்ளதை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் இதனை மீறினால், தொடர்ந்து கப்பல்கள் தாக்கப்படும் என ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button