அரசியல்

பிறப்பின் அடிப்படையில் உயர்சாதி – சட்டத்தை பயன்படுத்தி சாதி மாறினார்! பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி, பிறப்பால் OC எனப்படும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அவரது சாதி, பிறகு பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.இதனை தெலங்கானா பாஜக தலைவர்கள் எதிர்த்தாலும், ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.
இதற்கு முன்பு ராகுல்காந்தியும் இதே போன்ற குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார். பாஜக அரசு தான், மோடியின் சாதியை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள், மோடி சார்ந்த சாதியை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்தது, பாஜக அரசு அல்ல, காங்கிரஸ் தான் எனக் கூறியுள்ளனர்.இதன் மூலம் மோடி OC எனப்படும் உயர்வகுப்பில் பிறந்து, பிறகு, அவரது சாதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டது தெளிவாகியுள்ளது.

இதுகுறித்து இன்னும் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, மோடி, மோத் பனியா என்ற குஜராத்தி சாதியை சேர்ந்தவர். இந்த சாதி, பிராமணர்களுக்கு அடுத்தபடியாக உயர் சாதியாக குஜராத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.
1994 ஆம் ஆண்டு குஜராத்திலும், 2000 மாம் ஆண்டு மத்தியிலும், இந்த சாதியை பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவித்தனர்.இதனால் மோடி பிறப்பின் அடிப்படையில் உயர் சாதியாக இருந்தாலும், பிறகு பிற்படுத்தப்பட்ட சாதியாக மாறினார்.இது 2014 பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவருக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
தான் ஒரு சாதாரண பிற்படுத்தப்பட்ட, ரயிலில் டீ விற்கும் குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற பிம்பத்தை மோடி ஏற்படுத்தியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.தற்போது, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூட, இந்த காரணங்களை வைத்தே மோடியை விமர்சித்துள்ளார்.உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதியாக மோடி, இருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாமே என சவால் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button