உலகம்

குறையாத பலம்

திங்கட்கிழமை ஒரே நாளில் 33 ராணுவ நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் படையினர் குழுமியிருந்த 20க்கும் மேற்பட்ட நிலைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ஹிஸ்புல்லா கூறியுள்ளது.மர்க்காபா பகுதியில் லெபனான் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற, இஸ்ரேல் படையினர் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.ஹைபாவில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கடற்படைத் தளத்தை குறிவைத்து, ராக்கெட் தொகுப்புகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Aita al-Shaab என்ற பகுதியில் ஊடுருவ முயன்ற இஸ்ரேல் படைகள் அடுத்தடுத்து பல முறை விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 3 கவச வாகனங்களைத் தகர்த்ததில், அவை தீப்பற்றி எரிந்ததால், உயிரிழப்புகள், அல்லது காயம் ஏற்பட்டிருக்கலாம் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான நிலைகளை அழித்ததாகவும், அவர்களின் ஆயுத களஞ்சியங்களை அழித்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. அதே நேரம் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் அண்மைக் காலமாக பல மடங்கு அதிகரித்து வருவதை இந்தச் சம்பவங்கள் காட்டி வருகின்றன.

இதனிடையே பெய்ரூட் நகரத்தின் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டுள்ளதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான ஐயன் டோம் உள்ளிட்ட கருவிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதை பயன்படுத்தி, ஹிஸ்புல்லா தனது தாக்குதல்களை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button