உலகம்

“தடுக்க முடியவில்லை” “இலக்கை சரியாக தாக்கினோம்” ஹவுத்திக்கள் அறிவிப்பு!

அமெரிக்க போர்க் கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹவுத்திக்கள்…
ஹவுத்தி நடவடிக்கைகளை தடுக்க முடியாமல் திணறிய அமெரிக்க படைகள்..

அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்கள் உள்ளிட்ட 3 கப்பல்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்துள்ளன. முதலாவதாக, இஸ்ரேல் துறைமுகத்திற்கு சென்று வரும் நிறுவனத்தின் கப்பலான Contship Ono மீது பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் தங்களது ஆயுதம் இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், ஹவுத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஏடன் வளைகுடாவில் அமெரிக்க போர்க் கப்பலான Cole மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வதாக அமெரிக்க போர்க்கப்பலான Laboon மீது ஏராளமான பாலிஸ்டிக் மிசல்ஸ்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்களும், ஏமன் கடல் எல்லையை கடந்து, செங்கடலுக்கு சென்று கொண்டிருந்ததாகவும், ஈரானின் தாக்குதலில் இருந்து, இஸ்ரேலை காப்பாற்ற சென்றவை என்றும் ஏமன் படைகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்களும், தங்களது ஆயுதங்களை ஆரம்ப நிலையில், தடுத்ததாகவும், ஒருக் கட்டத்தில் அவர்களால், தடுக்க முடியாமல் போனதாகவும், தங்களது டிரோன்கள் மற்றும் மிசல்ஸ்கள், இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் யஹ்யா சாரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா அனுப்பிய அனைத்து, போர்க்கப்பல்கள், ஆயுதங்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால், தங்களது அனைத்து சக்திகளையும் திரட்டி, அவற்றை தகர்ப்போம் என ஏமன் படை அறைகூவல் விடுத்துள்ளது.

அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள், அறிக்கைகள் விடுவதை நிறுத்திக் கொண்டு, இஸ்ரேலுக்கு எதிரான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காசா மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் ஏமன் படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

======================

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button