நெருங்க முடியாமல் திணறல்!

திங்கட்கிழமை அதிகாலை லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைய முயற்சிக்கும் போது சிறிய வகை பீரங்கிகளை கொண்டு ஹிஸ்புல்லா வீரர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.இந்தத் தாக்குதலில் 25 வயதான இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு, இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.லெபனான் எல்லைக்குள் பலமுறை நுழைய முயற்சித்தும் இஸ்ரேல் ராணுவம் தோல்வியையே தழுவி இருக்கிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தின் ஒவ்வொரு முயற்சியையும் போர் முனையில் நின்று முறியடித்து வருகின்றனர்.தெற்கு லெபனானில் யாரோன் பகுதியில் நடந்த மோதலில் ஹிஸ்புல்லாவின் கடுமையான தாக்குதலால் இஸ்ரேல் ராணுவம் பின்வாங்கியது.
ஹிஸ்புல்லா நடத்திய எதிர் தாக்குதலின் உக்கிரத்தன்மையை அருகில் உள்ள கிராமத்திலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.களத் சுகைப் பகுதியில் நடந்த சண்டையிலும் பல உயிர் இழப்புகளை இஸ்ரேல் சந்தித்திருக்கிறது.
உடைசா பகுதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 15 இஸ்ரேல் படையினர் பலியாகியுள்ளனர்.லெபனான் எல்லையோரப் பகுதியில் நடந்த மோதலில் இஸ்ரேலின் தரைப்படையினர் மட்டும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.தோல்வி முகத்தில் இருக்கும் இஸ்ரேல் இந்த இழப்புகளை பொதுவெளியில் மறைத்து வருவதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.