225 இடங்களில் ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் – ஷாக்கில் ஐ.நா. அமைதிப்படை!

(UNIFIL) யூனிஃபில் எனப்படும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைதிப்படை, தெற்கு லெபனானில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. லெபனான் ராணுவத்தை, எல்லையில் அமர்த்தும் வேலைகளை கண்காணித்து வருகிறது. இஸ்ரேல், லெபனான் படைகள் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு தெற்கு லெபனானின் லித்தானி ஆற்றிக்கு அப்பால் பின்வாங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த பகுதிகளில், ஐ.நா.வின் அமைதிப்படை, தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், 225 இடங்களில் ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் காணப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் ஆயுதங்களை எடுத்துச் செல்லுமாறு, லெபனான் ராணுவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் யூனிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் 5 லெபனான் நிலைகளை கைப்பற்றி வைத்துள்ளதாகவும், அங்கிருந்து வெளியேற மறுப்பதால், அந்த நிலைகளை லெபனான் ராணுவம் வசம் ஒப்படைக்க முடியவில்லை என்றும் ஐ.நா. அமைதிப்படை குற்றம்சாட்டியுள்ளது.
====