உலகம்

பட்டனை தட்டிய உக்ரைன்? முடங்கிய எக்ஸ் தளம்!

உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என டொனால்டு டிரம்பும், அவரது ஆதரவாளருமான எலான் மஸ்கும் விரும்புகின்றனர். ஆனால் போர் நிறுத்தம் தங்களுக்கு பெரும் இழப்பை தரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தான் ஒரு பட்டனை தட்டினால், உக்ரைனின் போர் இயந்திரங்கள் முடங்கி விடும் என மிரட்டலை விடுத்திருந்தார் எலான் மஸ்க்.இந்தச் சூழலில் திங்கள் முழுவதும் எலான் மஸ்கின் புதிய பெயர் கொண்ட டுவிட்டர் தளமான, எக்ஸ், அடுத்தடுத்து சைபர் தாக்குதலை எதிர்கொண்டு முடங்கியது.

After Massive Cyberattack Hits X, Elon Musk Claims A Ukraine Link

இந்தத் தாக்குதல்கள் உக்ரைன் பகுதி ஐபி முகவரிகளில் இருந்து நடத்தப்பட்டதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.இதனிடையே இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களை குறிவைப்பதில் பெயர் பெற்ற பாலஸ்தீன ஆதரவு குழுவான டார்க் ஸ்டோர்ம் குழு, இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் உண்மையிலேயே இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற குழப்பம் நிலவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button