கடும் பாதிப்புகளுக்கு மத்தியில் காசாவுக்கு உதவும் உக்ரைன் – உணவுப் பொருட்களை அனுப்பி வைத்த அதிபர் செலன்ஸ்கி!

ரஷ்யாவின் கடும் தாக்குதலுக்கு மத்தியிலும் காசாவுக்கு உதவும் உக்ரைன்…ஆயிரம் டன் கோதுமை மாவு அனுப்பி வைத்து, மனித நேயம்…பெரும் விவசாய நாடான உக்ரைன் இதற்கு முன்பும் பாலஸ்தீனத்துக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வந்தது. ரஷ்யாவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு போர் வெடித்த பிறகு, வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதை நிறுத்தியது.
கருங்கடல் வழியாக சரக்கு போக்குவரத்து நடத்த முடியாதவாறு, ரஷ்யா தாக்குதலை தொடுத்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக, 1000 டன் கோதுமை மாவு அனுப்பி வைக்கப்படுவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.இதன் மூலம் சுமார் 1 லட்சம் பாலஸ்தீன குடும்பங்கள் ஒரு மாதத்திற்கு பயனடைவார்கள் என உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரம் காசாவுக்குள் எந்த உதவிப் பொருட்களும் செல்லாத வாறு, இஸ்ரேல் மீண்டும் முழு முற்றுகையை தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனின் உதவி பாலஸ்தீனியர்களுக்கு உடனடியாக சென்றடையாது எனத் தெரிகிறது.
காசாவுக்கு மற்றொரு பக்கம் ரஷ்யாவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீன், லெபனான் போராளிக்குழுக்களுக்கு சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளது. அந்த அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக கருத முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறது ரஷ்யா.