காசாவில் 6 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம் – இதயத்தை நொறுக்கும் சம்பவம்

காசாவில் 6 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரங்கள்..
அல் ஜசீரா வெளியிட்ட விசாரணை அறிக்கையால் பரபரப்பு…
இஸ்ரேலை கண்டித்து பதவி விலகும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள்…
இஸ்ரேலின் தாக்குதலால் படுகாயம் அடைந்த 6 வயதுச் சிறுமிக்கு உரிய சிகிச்சை கிடைக்க விடாமல் செய்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகள், அவர் துடிதுடித்து இறக்கும் வரை, காத்திருந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து, அல்ஜசீரா ஊடகம், Fault Lines என்ற பெயரில் தயாரித்துள்ள ஆவணப் படம் உலகத்தையே நடுக்கத்தில் உறையவைத்துள்ளது.
காசா சிட்டி பகுதியில் ஹிந்த் ரஜப் என்ற 6 வயதுச் சிறுமியும், அவரது உறவினர்களும் சென்ற காரை, சுமார் 50 அடி தூரத்தில் இருந்து, இஸ்ரேல் பீரங்கி வாகனம் தாக்கியுள்ளது. இதில் காரில் இருந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆனால் அந்த காரில் இருந்த சிறுமி ஹிந்த் ரஜப் படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார். உடனடியாக அந்த இடத்திற்கு காசா சுகாதாரத்துறையின் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் அருகில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து, சிறுமியின் தான் வேறு ஒரு இடத்தில் இருந்ததால், காசா சுகாதாரத்துறை ஆண் செவிலியர்கள், தொலைப்பேசி மூலம் ரஜபின் தாயார் விசாம் ஹமதாவிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை பேச வைத்துள்ளனர்.
அப்போது வாயில் வடிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டு, தாயிடம் பேசிய சிறுமி, அம்மா என்னால் வழி தாங்க முடியவில்லை. என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு, உடைந்து போன சிறுமியின் தாயார், நிச்சயம் உன்னை அழைத்துச் செல்வேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் வரை, காயத்துடன், உயிருக்கு போராடிய நிலையில், சிறுமி இருந்துள்ளார். ஆனால் அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இஸ்ரேல் படை அனுமதிக்கவில்லை. கடைசியாக தனது தாயாரிடம் பேசிக் கொண்டிருந்த போதே சிறுமி மயங்கியுள்ளார்.
இதனையடுத்து, தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என கூறி, காசா சுகாதாரத்துறையைச் சேர்ந்த மீட்பு குழுவினரான Yousef Zeino மற்றும் Ahmad al-Madhoun ஆகியோர் சிறுமியை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, ஆம்புலன்ஸ் மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு, இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுமியும் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமானப்படை அதிகாரிகளான Larry Hebert மற்றும் Juan Bettancourt ஆகியோர் ராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமானப்படை அதிகாரி Aaron Bushnell என்பவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, பாலஸ்தீனியர்களுக்காக உயிர்த் தியாயம் செய்தார்.
6 வயதுச் சிறுமிக்கு நடந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போல், கணக்கில் வராத, கண்டுகொள்ளப்படாத மரணங்கள் காசாவில் நாள்தோறும் நிகழ்ந்து வருவது வேதனை.
=====