உலகம்

மொத்தம் பணமும் காலி – இனி ஒன்னும் இல்லை!

காசாவில் ஏற்பட்ட படுதோல்வியை மறைப்பதற்காகவே லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்து, மற்றும் ஒரு படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது.அப்பாவி மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்றுவிட்டு, தற்போது, அதனால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளை தாங்க முடியாமல் திணறி வருகிறது ஆக்கிரமிப்பு இஸ்ரேல்.

தங்களது ராணுவ வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 1000 இடங்களில் குண்டு வீசியதாக ஆக்கிரமிப்பு படை பெருமிதமாக கூறிக் கொண்டது. ஆனால் இதற்காக சுமார் 173 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது இஸ்ரேல். இது அனுமதிக்கப்பட்ட செலவுகளை கடந்து விட்டதாம். இனி செலவு செய்ய, கேபினட் கூட்டத்தில் மீண்டும் ஒப்புதல் பெற வேண்டுமாம். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இஸ்ரேல். இதனால் சமாதான கொடியை பறக்க விடுவது பற்றி ஆலோசித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தாக்குதல்களை குறைக்குமாறு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கன் பப்ளிக் ரேடியோ என்ற ஆக்கிரமிப்பு ஊடகம் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில், வடக்கு இஸ்ரேலை துவம்சம் செய்துள்ள ஹிஸ்புல்லா, தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 300 ராக்கெட்டுகளை வீசி வருவதால், கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை சரி செய்ய, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள மற்றொரு முக்கியத் தகவல் என்னெவென்றால், அண்மையில் டெல் அவிவ்வில் உள்ள மொசாத் தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 500 கிலோ வெடி மருந்துகள் கொண்ட பாலிஸ்டிக் மிசல்ஸ்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பெரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தும் போது, ஐயன் டோம்களால் தடுக்கப்பட்டாலும் கூட, அதன் துகள்கள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடும் என்பது தான். தற்போது, இஸ்ரேலில் ஹிஸ்புல்லாவால் தாக்க முடியாத இடம் என்று எந்த இடமும் இல்லை என ஆக்கிரமிப்பு ஊடகங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button