உலகம்
9625 பாலஸ்தீனியர்கள் கைது! ஏற்கனவே விடுதலையானர்கள் மீண்டும் கைது!

ஹமாஸ் உடன் முதல்கட்ட போர்நிறுத்தத்தின் போது, இஸ்ரேல் விடுவித்த பாலஸ்தீன கைதிகளை மீண்டும் கைது செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு கரையில் வியாழக்கிழமை இஸ்ரேல் 15 பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளது. இதில் பலர் ஏற்கனவே இஸ்ரேல் சிறையில் பல வருடங்கள் கழித்து, விடுதலையானவர்கள் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பாலஸ்தீன சிறைவாசிகள் சமூகம் அமைப்பு, நபுலஸ், ரமல்லா, பெத்லகேம், ஹெப்ரான், துபஸ் மற்றும் குவால்கிலியா ஆகிய நகரங்களில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது, இஸ்ரேல் சிறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் இருந்த நிலையில், அதற்கு பிறகு மட்டும், தற்போது, வரை 9625 பேரை இஸ்ரேல் கைது செய்துள்ளது.
====