நேருக்குநேர் வந்தால் இது தான் நிலை!

காசாவைத் தொடர்ந்து மேற்குகரையிலும் போராளிக்குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை தொடங்கியுள்ளனர். எனினும் அவர்களிடம் துப்பாக்கிகளை தவிரவேறு ஆயுதங்கள் இல்லை. இந்தச் சூழலில் வான் வழியாகவே குண்டுகளை வீசிவதை வழக்கமாக வைத்துள்ள இஸ்ரேல், நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவதில்லை.அதன் ஒரு பகுதியாக நபுலஸ் பகுதியில், பாலஸ்தீன் போராளிக்குழுக்கள் மீது, இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படை திடீத் தாக்குதல் நடத்தியது.
இதில் போராளிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஒருவர் காயம் அடைந்தார். அதே நேரம் அவர்கள் திருப்பித் தாக்கியதில், ஆக்கிரமிப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வான்வழியில் மட்டுமே தங்களது வலிமையை பறைசாட்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை, பாலஸ்தீனியர்களிடம், தரைவழியில் தொடர்ந்து, பலத்த சேதாரங்களை சந்தித்து வருகிறது.தற்போது, லெபனானுக்குள் தரை வழியாக நுழையும் முயற்சியும் தோல்வியில் முடியும் என பலரும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.