“கூடாரத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்” மோனாலிஷாவுக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்!

ஐஸ்வர்யா ராய்க்கே Tough கொடுக்கும், தனது amber eyes அழகால் ஆல் இந்தியா அளவில் Famouse ஆனார் ஊசி பாசி விற்கும் 16 வயதுச் சிறுமி மோனாலிஷா. அவர் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வைரல் செய்திகளாக மாறியுள்ளன. இந்நிலையில் அண்மையில் தனக்கு நடந்த ஒரு கொடுமையை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.திடீரென ஒரு கும்பல் தனது கூடாரத்துக்குள் எந்த அனுமதியும் இன்றி, அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுக்க வேண்டும் என கூற, அச்சத்தில் உறைந்துள்ளார் மோனாலிஷா. காரணம் மின்சார விளக்கோ, வேறு விளக்கோ இல்லாத இருள் சூழ்ந்த கூடாரமாக அது இருந்துள்ளது. மோனாலிஷாவின் தந்தை தான் அந்த கும்பலை அங்கு அனுப்பி வைத்து, புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரோ, எனது தந்தையே சொன்னாலும் உங்களுடன் புகைப்படம் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் மீறி, அத்துமீறி அவரிடம் நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மோனாலிஷாவின் தந்தையும், சகோதரரும் அங்கு வந்துள்ளனர். தனது தந்தையிடம், புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளீர்களா என கேட்க, அவர் நான் அப்படி யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என கூறி, அந்த கும்பலை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் மீண்டும் சிலர் புகைப்படம் எடுக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி, மிரட்டி, புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, மோனாலிஷாவின் சகோதரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, 9 பேர் அடங்கிய கும்பல் அவரை தாக்கியுள்ளது.இதனால் பாசிகளை விற்று, வாழ்க்கை நகர்த்தும் நோக்கத்தில் வந்த மோனாலிஷா குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத பிரபலம் அவரது வாழ்க்கையை ஒரு பக்கம் மாற்றினாலும் அதற்கிடையே கும்பமேளாவில் அத்துமீறி நடந்து கொண்ட கும்பல்களால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.