ஜாஹிர் நாயக் விவகாரம் – இந்தியாவுக்கு பதில் அளித்துள்ள மலேசியா!

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை கட்டியணைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மோடியின் இந்தப் பயணத்தின் போது, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல விசயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் மலேசிய அரசு பரிசீலித்ததாகவும், அவை ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப போதுமானவை அல்ல என அவர் கூறியுள்ளார்.
மேலும் மலேசியாவில் ஜாகிர் நாயக், இந்தியாவிற்கு எதிராக எந்த பேச்சும் பேசவில்லை என்றும் செயல்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மலேசிய பாதுகாப்புக்கு அவரால் அச்சுறுத்தல் இல்லை என்றும் அதுவரை ஜாகிர் நாயக் மலேசியாவில் தங்கிருப்பார், அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை என மலேசிய அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் காஷ்மீர் பிரச்னை குறித்து, மோடியிடம் பேசினீர்களா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னை முழுக்க முழுக்க இந்தியாவின் உள் விவகாரம், எனவே அதுகுறித்து பேச மலேசியாவிற்கு உரிமை இல்லை, அதே நேரம் மலேசியா அமைதியை விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
மலேசியாவில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்று கருத்துச் சொல்வதற்கு பிற நாடுகளுக்கு உரிமை உள்ளது போல், இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் சூழல் மலேசியாவிற்கு கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர் ரோகிங்கியா அகதிகள் விவகாரம் மலேசியாவிற்கு கடினங்களை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.மலேசியாவில் 2 லட்சம் ரோகிங்யா அகதிகள் உள்ளனவர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு வீடு கட்டிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.