இதுவரை உலகம் பார்த்திடாத கொடுமை! பொட்டலம் கட்டப்பட்ட மனிதர்கள்!

உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியாத சூழல்…
கேரி பேக்குகளில் நிரப்பப்பட்ட உடல் உறுப்புக்கள்…
எடை போட்டு, எண்ணிக்கையை தீர்மானித்த துயரம்…
காசா பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் சனிக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீசப்பட்ட பேரழிவு வெடிகுண்டுகளால், உடல்களை சிதைந்து மக்கள் பலியாகினர். ஒரு உடல் கூட முழுவதுமாக மீட்கப்படவில்லை.
இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்கு செய்யவும், எண்ணிக்கை மேற்கொள்ளவும் இயலவில்லை.
இந்நிலையில், உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, அதனை எடை போட்டு, 70 கிலோ எடையை ஒரு உடலாக, காசா சுகாதாரத்துறை கணக்கிட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டு போர்க்களத்திலும் இப்படிப்பட்ட கொடுமைகள் அரங்கேறவில்லை. இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை மட்டுமே தெரிவித்துள்ளன. அதே நேரம் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் அமைப்பினர் இருந்ததால், தாக்குதல் நடத்தியதாகவும், 10க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புகைப்படங்கள் இது தான் எனக் கூறி, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை புகைப்படங்களையும் வெளியிட்டது.
இதனை திட்டவட்டமாக மறுத்த ஹமாஸ் புகைப்படத்தில் இருப்பவர்கள், ஏற்கனவே இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என்றும், தங்களது அமைப்பு பொதுமக்களின் இடங்களை பயன்படுத்துவதில்லை என விளக்கம் அளித்தது.
காசா மீதான போர் 310வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
===