ரத்தமாக மாறிய அமெரிக்க நாடாளுமன்ற நீருற்று! விநோத முறையில் எதிர்ப்பு!

சிவப்பு நிறமாக மாறிய அமெரிக்க நாடாளுமன்ற நீருற்று…
காசாவில் சிந்தப்படும் ரத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைப்பு…
விநோத முறையில் கண்டனத்தை பதிவு செய்த போர் எதிர்ப்பாளர்கள்…
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்ற கேப்டல் கட்டிடத்தில் உள்ள நீருற்றில், சிவப்பு நிற சாயத்தை கலந்து ரத்தம் வடிவது போல போராட்டக்காரர்கள் மாற்றினர்.
காசாவில் பெண்கள் குழந்தைகள் உட்பட நாற்பது ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தை அழித்து, பணய கைதிகளை மீட்பது தான் நோக்கம் என்று கூறி போரை தொடங்கிய பெஞ்சமின் நெதன்யாகு, 10 மாதங்கள் ஆகியும், மீண்டும் அதையே கூறி வருகிறார்.
ஆனால் தொடர்ந்து இஸ்ரேல் படைகளை எதிர்கொண்டு, ஹமாஸ் சண்டையிட்டு வருகிறது. அந்த அமைப்பிடம் தொடர்ந்து ஆயுதங்கள் இருந்து வருகின்றன. காசாவை 10 மாதங்கள் ஆகியும் இன்னும் இஸ்ரேல் படைகளால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக பணய கைதிகள் எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை.
அவர்களை மீட்கவும் இஸ்ரேல் படைகளால் முடியவில்லை. இதற்கிடையே பல பணய கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
காசா தொடர் முற்றுகையில் பணய கைதிகளுக்கு, உணவு, மருந்து, சரியாக வழங்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கும் பதில் இல்லை.
இதற்கிடையே சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் நெதன்யாகுவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது.
அப்படி அறிவிக்கப்பட்ட போர்க்குற்றவாளிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வரவேற்கு அளிக்கப்பட்டு, பேச வாய்ப்பும் அளிக்கப்பட்டிருப்பது பெரும் அவமானமாக அமைந்துள்ளது.
=====