உலகம்

கடைசி 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய வன்முறைகள்! 271வது நாளாக வேடிக்கை பார்க்கும் உலகம்!

காசா மீது 271வது நாளாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…
3 இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 28 பாலஸ்தீனியர்கள் பலி… 125 பேர் படுகாயம்…
தொடர்ந்து வேடிக்கை பார்க்கும் உலகம்…

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 271வது நாளை எட்டியுள்ளது. இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆயிரத்து, 953ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 87ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 இடங்களில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை இனப்படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இதில் 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 125 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்க முடியாததால், அவர்கள் அதற்குள் சிக்கி உயிருக்கு போராடி, அணு அணுவாக வேதனையுடன் மரணத்தை தழுவி வருகின்றனர்.

தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லக் கூட ஆட்கள் இல்லாததால், சாலைகள், தெருக்களில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடப்பதாக லெபனான் ஊடகம் அல் மயாதீன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் பாலஸ்தீன் போராளிக்குழுக்களை நோக்கி நடத்தப்பட்டவை அல்ல. சாதாரண அப்பாவி பாலஸ்தீனியர்களே இதில் பலியாகியுள்ளனர். நுசைரத் அகதிகள் முகாமில் 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெல் அல் சுல்தான் பகுதியில் 7 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்துள்ளது. அல் சுஜேயா பகுதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர முயன்ற பாலஸ்தீன பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அல் மகாசி அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர். ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் பாலஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button