மோடி அமைச்சரவையில் அதிக இடங்களை பிடித்த உயர் சாதியினர் – 21 பேருக்கு அமைச்சர் பதவி!

மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 71 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், எண்ணிக்கையில் சுமார் 90 சதவீதம் உள்ள, தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு குறைவான இடங்களும், இஸ்லாமியர்களுக்கு பூஜியம் இடமும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் குறைவான எண்ணிக்கையில் உள்ள உயர் பிரிவை சார்ந்தவர்கள் சுமார் 21 அமைச்சர் பதவிகளை பிடித்துள்ளனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையினருக்கு 5 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கு மேல் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட பாஜக கட்சியாலோ, அல்லது அதன் கூட்டணி கட்சியிடம் இருந்தோ, கிடைக்கவில்லை. பாஜக சார்பில் ஒரு இஸ்லாமிய எம்.பி. கூட தற்போது, மக்களவையில் இல்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சராக இருந்தார். பிறகு, அவர் பதவி விலகினார்.
தற்போதைய மோடியின் 3வது அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.தமிழக பாஜகவைப் பொருத்தவரை, தமிழிசை சவுந்திர ராஜன், பொன். ராதாகிருஷ்ணன் போன்ற பலர் தேர்தல் கடும் தேர்தல் பணியாற்றிய நிலையிலும் தோல்வியைத் தழுவினர். இதனால் அவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அதே நேரம் தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாமல், தேர்தலில் போட்டியிடாமல் தற்போது மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, பாஜகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.