இஸ்ரேலுக்கு கப்பல் கப்பலாக ஆயுதங்கள் அனுப்பிய அமெரிக்கா! நாகரீக சமூகத்திற்கு பெரும் தலைகுனிவு!

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு பெருமளவில் பேரழிவு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை, இஸ்ரேல் பத்திரிக்கையான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.அமெரிக்கா வைத்திருக்கும் பேரழிவு ஆயுதங்களில் மிக முக்கியமானது MK-84 எனப்படும் 907 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஆகும். வானில் இருந்து விமானங்கள் மூலம் எரியப்படும் இந்த குண்டு தரையில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்தும். இந்த வகையிலான சுமார் 14,000 குண்டுகளை அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடந்த 9 மாதங்களில் அனுப்பி வைத்துள்ளது.
அதாவது ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 50 குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல் சுமார் 226 கிலோ எடை கொண்ட 6500 வெடிகுண்டுகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
மேலும் Hellfire precision-guided air-to-ground missiles எனப்படும் வானத்தில் இருந்து, தரை இலக்குகளை தாக்கும் 6500 ஏவுகணைகளை அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது.அடுத்ததாக bunker-buster bombs எனப்படும் நிலத்தை பல அடி தூரம் பள்ளமாக்கி, கட்டிடங்களை தரை மட்டமாக்கும் 1000 வெடிகுண்டுகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.இதே போல் தரை இலக்குகளை துள்ளியமாக தாக்கும் சுமார் 110 கிலோ எடை கொண்ட 2600 சிறிய ரக வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் இருவர், பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளதாக, இஸ்ரேலின் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் தெரிவித்துள்ளது.காசா படுகொலைகளுக்கு அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா நாடகமாடி வருவதாககுற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.