அமெரிக்காவை நடுநடுங்க வைத்த தாலிபான் தலைவர் – சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்!

அமெரிக்க படைகளை ஓடஓட விரட்யடித்த தாலிபான் தலைவர்…சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்…மத்திய கிழக்கு அரசியலில் மாபெரும் மாற்றம்…20 ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டும், அமெரிக்காவால் வெல்ல முடியாத குட்டிநாடு ஆப்கானிஸ்தான். இதற்கு மிக முக்கிய காரணம் தாலிபான்கள். இந்த அமைப்பின் முக்கியத்தலைவர் சிராஜுதீன் ஹக்கானி.இவர் தனிப்படை ஒன்றை நடத்தி வந்தார். அந்த படையின் பெயர் ஹக்கானி நெட்ஒர்க். அமெரிக்க வீரர்களை குறிவைத்து, பல்வேறு அதிரடித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது ஹக்கானி நெட்ஒர்க்.
இதனால் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சவப்பெட்டிகளில் அந்நாட்டு வீரர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ‘
இந்தச் சூழ்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள், ஆப்கானில் இருந்து தோற்று வெளியேறின.
ஆப்கானை ஆண்டு வந்த அமெரிக்க ஆதரவாளரான அஷ்ரப் கனியின் படைகள், தாலிபான்களிடம் சரணடைந்தன. அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து, தாலிபான்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்ற புதிய நாட்டை அறிவித்தனர்.இந்நிலையில், அமெரிக்க படைகளை கொன்று குவித்த, தாலிபான்களின் ஹக்கானி நெட்ஒர்க்கை அமெரிக்கா தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்துள்ளது.
குறிப்பாக அதன் தலைவர் சிராஜ்தீன் ஹக்கானியின் தலைக்கு, 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 83 கோடி ரூபாய் ஆகும்.உலகில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட இடதுசாரி நாடுகள் ஆப்கனை ஒரு நாடாக அங்கீகரித்து, அதன் தூதர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீகரத்திற்கு முதன்முறையாக அரசுப் பயணம் மேற்கொண்டார் சிராஜுதீன் ஹக்கானி.அவருக்கு அபுதாபியில் உள்ள பிரபலம் வாய்ந்த Qasr Al Watanசொகுசு அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.அமீரக ஆட்சியாளர் Sheikh Mohammed bin Zayed Al Nahyan தாலிபான் தலைவரை கை குலுக்கி வரவேற்றார்.இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காரணம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமெரிக்கா வசம் உள்ளது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள மன்னரின் அரண்மனையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திப் போராளிக்குழுக்கள், சவுதி அரேபியாவுக்கும், அமீரகத்திற்கும் தொடர்ந்து சவால்களை விடுத்து வருகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவாக சவுதியும், அமீரகமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாலிபான்களுடன் அமீரகம் சந்திப்பை நடத்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது.