உலகம்

பலம் குறையவில்லை

ஹாமாசின் ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்திருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. இந்த தாக்குதலை ஹமாஸ் காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இருந்து நடத்தி இருக்கலாம் என்று கணித்து அங்குள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.கிழக்கு திசையில் இருந்து கான் யூனிஸ் பகுதியை கைப்பற்ற கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் முயற்சித்தும் தோல்வியே தழுவி இருக்கிறது.

ஹமாசின் இந்த தாக்குதல் மூலம் கடந்த ஓராண்டாக 2 லட்சம் கோடி செலவு செய்தும் இஸ்ரேலால் ஹமாஸ் படையின் உறுதித் தன்மையை குலைக்க முடியவில்லை என்பது தெரிய வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1 200 பேர் பலியானார்கள், மேலும் 250 பேர் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை, கைதிகள் பரிமாறிக் கொள்ளும் அடிப்படையில் ஹமாஸ் படை விடுவித்தது. மேலும் சிலர் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.இன்னும் 100 பேர் வரை காசாவில் ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். போர் நிறுத்தம் செய்து பணயக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் ஏராளமான போராட்டங்களை அந்நாட்டு மக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாத இஸ்ரேல் அரசு தொடர்ச்சியாக காசா பகுதியில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் 17 ஆயிரம் பேர் குழந்தைகள் என்றும், 11 ஆயிரம் பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button