உலகம்

இஸ்ரேல் அதிகார வர்க்கத்தை உலுக்கிய இறப்பு – வெளியுறவுத்துறை இயக்குநரின் மகன் பலி!

இஸ்ரேல் அதிகார வர்க்கத்தை உலுக்கியுள்ள இறப்பு…
பாதுகாப்புத்துறை இயக்குநரின் மகன் பலி…
மரண ஆகஸ்ட் என விமர்சித்துள்ள ஆக்கிரமிப்பு ஊடகங்கள்…

ஆகஸ்ட் மாதம் ஆக்கிரமிப்பு வீரர்களுக்கு மரண மாதமாக அமைந்துள்ளதாக இஸ்ரேல் நியூஸ் பேப்பரான மாரிவ் வர்ணித்துள்ளது. காசா மற்றும் லெபனான் எல்லையில் 15 வீரர்கள் கடந்த 25 நாட்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இஸ்ரேலின் அதிஉயர் பிரிவான நாகல் பிரிகேட்டின் அதிகாரி, 19 வயது மட்டுமே ஆன அமிட் பிரைட்மேன் கொல்லப்பட்டதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அமிட் பிரைட்மேனின் தந்தை Assaf Friedman இஸ்ரேல், நாடாளுமன்றமான நெசட்டின், வெளியுறவு மற்றும் ராணுவ கமிட்டியின் இயக்குநர் ஆவார்.

இதனால் இந்த இறப்பு இஸ்ரேல் அதிகாரவர்க்கத்தை உலுக்கியுள்ளது. இறுதிச்சடங்கின் போது, உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமிட் பிரைட்மேனின் சகோதரர், நீ காசாவுக்குள் நுழையும் போது, உனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக எங்களால் ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தோம். ஆனால் உனது மரணச் செய்தி வீட்டு கதவை தட்டி விட்டது. என குறிப்பிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காசாவின் 90 சதவீத பகுதிகள் மக்கள் வாழ தகுதியற்ற பகுதிகளாக அழிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் 10 மாதங்களை கடந்த நிலையிலும், ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து போரிட்டு வருகிறது.


=======

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button