ஆசியாவிலேயே பணக்கார கிராமம்… எங்கிருக்கு தெரியுமா?

ஆசியாவில் பணக்காரர்கள் வாழும் பல நகரங்கள் இருக்கலாம், ஆசியாவிலேயே பணக்கார கிராமம் நம்ப இந்தியாவுல தான் இருக்குன்னா உங்களால நம்ப முடியுதா?. ஆமாங்க, நம்ப பிரதமர் மோடி பிறந்த குஜராத் மண்ணில் தான் இந்த அதிசயம் கிராமம் உள்ளது. பூஜில் அமைந்துள்ள மாதபூரில் சுமார் 32,000 மக்கள் தான் வசிக்கிறாங்க.
ஆனா இவங்களோட பணம் மட்டும் சுமார் 7 கோடி அளவுக்கு வங்கியில டெபாசிட் பண்ணி வச்சியிருக்காங்க. அந்த அளவுக்கு அந்த கிராம் செல்வ செழிப்போட இருக்க காரணம், இந்த கிராமத்தைச் சேர்ந்த 65 சதவீத மக்கள் என்.ஆர்.ஐ.க்களாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பணம், மாதம்பூரை செழிப்பான கிராமமாக மாற்றியுள்ளது. பளபளக்கும் சாலைகள், குடிநீர் வசதிகள், தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுத்தமான மதத்தலங்கள் ஹைகிளாஸ் Infrastructure உடன் ஃபாரினில் உள்ள கிராமங்களுக்கு சவால் விடுகிறது.
இப்படி வெளிநாட்டு பணம் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதை அறிந்த தனியார் மற்றும் அரசு வங்கிகள் மாதப்பூரை முற்றுகையிட ஆரம்பித்துள்ளன. தற்போது, மாதபூரில் SBI, HDFC, ICICI மற்றும் PNB உள்ளிட்ட 17 முக்கிய வங்கிகளின் கிளைகள் உள்ளன.